Followers

Sunday 9 September 2018

வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் ..!!


🙏 நம் வீட்டு பூஜையறைகளில் சாமி படங்களை வைத்து வணங்குகிறோம். ஆனால், பூஜையறைகளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

🙏 நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறு தொழுதலை விட அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

🙏 யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

🙏 பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

🙏 விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

🙏 ஈர உடையுடனும், தலைமுடியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துண்டு போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக்கூடாது.

🙏 சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை.

🙏 பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும், இரவு தூங்கும் முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

🙏 கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

🙏 தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

🙏 விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

🙏 விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ, திரியை தூண்டுவதோ கூடாது.

🙏 எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக்கூடாது.

🙏 பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

🙏 வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

🙏 வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும்.

No comments:

Post a Comment