Followers

Sunday, 9 September 2018

படித்து பாருங்கள் கரைந்து போவீர்கள்

கடவுளைக் காணத்
தேவைப்படும் கண்ணாடிகள்!!!
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.
ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.
தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
ஓ! கடவுள் என்று ஒன்றுஉண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''
தம்பீ, காண முயலுகின்றேன்.''
கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''
இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''
ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை;
இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''
அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'
என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.''
தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான்.
தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''
என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது?
பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய்.
பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள்.
அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "
உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''
ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''
ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.
ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''
எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''
ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.
குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.''
ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "
ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''
அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.
ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.
தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தா
குருவே சரணம்,,,🙏🏻👑🙏🏻
*பிறப்பும் இறப்பும் ஏன் ?*

பிறப்பு எனும் பேரதியத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.

எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். ..

*எதனால் இந்த பிறப்புகள் ?*

*பிறப்பினால் யாருக்கு நன்மை ?*

ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும், இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?

பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ?

இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?

விதிப்படி பிறப்பதும், விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?

இப்படியே போனால் பிறப்பின் மீதும், இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?

ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?

எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?

*அப்படியானால் . . . . . .*

*இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?*

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.

பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை. பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர். பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்...

இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?

பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ? உத்தமர்களும் மரணிக்கின்றனர், உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.  ஏன் இந்த நேர்தல் ?  உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?

*பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.*

ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார். அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது. அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார். அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை. அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை...

அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார். இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது. இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

*ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் என்னபயன் ?* ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் ?

பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும், சுவாமி விவேகானந்தராக இருந்தாலும் ,பேரரசன் ராஜ ராஜ சோழனாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது . இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ? இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே !!!!!!!

*பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?*

1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை, தேக சுகம், பதவி, புகழ் தரும் மயக்கம். மது, மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.

2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம்.

என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?  பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது. அது என்ன ?

பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது, அதாவது ஜீவராசிகளின் பாப, புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது. 

முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் செய்த பாப, புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது. 

மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .

இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.


*இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான் என்ன ?*

இதோ ஒரு சிற்றறிவிற்க்கு தோன்றிய விடை ..... ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ?

மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம். 

அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம். 

இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?

அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,

ஆனால் . . . .  பிறப்பினை, அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.

நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.

நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான். இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.

ஆக
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம்*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை*
*பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.*

பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை... (ஓம் குமர குருதாச குருப்யோ நம:)

*இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது.*

நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார். இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி மரணிக்கின்றது. பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார், அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது, மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார், அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .

மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி  மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் மகாவிஷ்ணு, நாரதா, “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா” என்கின்றார்.  ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார், கண்டவுடன் சட்டென்று திரும்பினார், அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.

நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது.

பிறப்பின் அவசியமும், பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.

பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.

ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல், பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால், நிச்சயம், மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம். இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.

கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும், சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.

பிறந்த பிறப்பினை உயர்த்துவோம்..
#கேள்வி : -

ஓஷோ , நீங்கள் அடிக்கடி , உங்கள் மையநிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள் .

 இந்த மையநிலை என்றால் என்ன ? இதைநோக்கி எப்படிச் செல்லுவது ?

 கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லையே ?

இது அலுப்பாக இல்லையா ? எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது ?

#ஓஷோபதில்‬‬ : -

 " ஆமாம் , உண்மைதான் .

நீங்கள் வேகமாகச் செயல்படப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள் .

இப்பொழுது நான் ' மெல்லமெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா ?

இதுவும் ஒரு தியானம்தான் ! ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ?

' இது என்ன சோம்பேறித்தனமான வேலை ? எவ்வளவு குறுகியதூரம் அலுப்பான வேலை ? " என்றுதான் கூறுவீர்கள் .

' பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் .

ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும் –
 நீங்கள் தியானத்தில் முன்னேறவேண்டுமானால் ! '

அடுத்து , உங்கள் மையநிலை என்பது எண்ணமற்ற உயிர்த்தன்மைதான்   வேறுஒன்றும்இல்லை ! நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ , அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித்தன்மை அதிகமாகும் . அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவீர்கள் . அவ்வளவுதான் ! அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம் .
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் .  உண்மைதான் .
ஒருநிகழ்ச்சி ..... டேவிட்ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி , கீழைநாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார் . ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை . சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை ? எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன.  இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம் ? என்று வெறுப்படைந்தார் . இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள் ! அதில் நீங்களும் அடக்கம் .
தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை ! பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது ! ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்கவேண்டும் . அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம் !  அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்லஅடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட்ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் .
வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பதுகூட அவ்வளவு சுலபமல்ல . ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள் . வெறுமனே பார்க்கும்பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும் . இது பழக்கதோஷம் . இதை நீங்கள் ஒரேநாளில் இல்லைஒரே வருடத்தில் சாதிக்கமுடியாது ! தேவை பொறுமை ! பொறுமை !! பொறுமை !!! விடாமுயற்சி ! விடாமுயற்சி !! விடாமுயற்சி !!!
அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பல முறை நடக்கும் . சலித்துக்கொள்ளாதீர்கள் ! பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும் . இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம் . நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்குப் பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள்ஆகலாம் ! இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும்.
நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒருகட்டத்தில் ஒன்றுமேஅற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்கு பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள் ஆகலாம் ! ஆனால் , இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும் ! ........
அப்பொழுது‬‬ அவர் ' தான் , ' தன்னை , இழக்கிறார் . அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் . பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள் ! அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும்இருக்காது . அதிகாலை ஒளியைப் போல குளிர்ச்சியாக இருக்கும் . இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள் . இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலானநிலை '  என்று பொருள் . அப்பொழுதுதான் உங்களுக்கு ' நீங்கள்யார் ? '  என்பது விளங்கும் ! அந்த ஒளிதான் நீங்கள் !
அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன . செயல்மாத்திரம் ( Predicate ) – அந்த ஒளி – தன் அறிவாய் தன் உணர்வாய் , மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது . அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ! ( Observer is Observed by itself ) இந்தநிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது !
ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும் . ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள் . மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும் ! இதை நீங்கள் மட்டும் , நீங்களேதான் தனியே அணுகவேண்டும் . வேறுவழியில்லை . உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்யமுடியாது ! அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம் . உங்களை ஊக்குவிக்கலாம் . தைரியம் ஊட்டலாம் .  அவ்வளவுதான் .
ஒருவரது பிறப்பு ,  இறப்பு , ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம் ! ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல் , உங்களால் ஞானமடையமுடியாது .
அடுத்து இன்னொரு விஷயம் . நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள் , துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும் . இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூலகாரணம் . ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள் ! இப்பொழுது உங்களுக்கு ஒருகுரு மிகவும் அவசியம் . இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார் . நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடையவேண்டும் ! அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது ! அது உங்களைப் பயமுறுத்தும் , பலஆசைகளைக்காட்டும் , வெளியே வா என்று உங்கள் கைகளைப்பிடித்து இழுக்கும் ! அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது . ஏனென்றால் , தியானம் என்பது அதற்குச் சாவுமணி ! அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும் ?
அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற , இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் – நீங்கள் மெல்ல மெல்ல அகற்றவேண்டும் . நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும் . ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும் ! அப்பொழுது அவைதானே விலகும் . இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ) . உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான்காரணம் .
இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல . இடையில் நீங்களாகச் சம்பாதித்துக் கொண்டது . இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள் !
நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள் . நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானுலும் இருக்கலாம் . 10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் . சீனாவில் பத்துலட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன !  என்ன ஆச்சரியம் !
இப்படி விதையாக நீங்கள் பலநாட்டில் பலபிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள் . ஆனால் , உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை ! அதே பணஆசை , கௌரவம் , பெண் இன்பம் .........அப்படித்தான் ! நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை . ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும் . ஏனெனில் , நீங்கள்  உங்கள் ( விதை ) மேல்தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும் . அந்த மேல்தோல் என்பது உங்கள்அகங்காரம்தான் . அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான் ! ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும் . ஆனால் , இது நிரந்தரமல்ல . நான் சத்தியம் செய்கிறேன் ! இது முற்றிலும் உண்மை . இது என் அனுபவம் .  ஆகவே பயப்பட வேண்டாம் . நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் . உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்க வேண்டும் .
*இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!*

 *இராமேஸ்வரம் தல வரலாறு*
*ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனைக் கொன்ற பாவத்தினை நீக்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.*

*22தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்*

*1. மகாலெட்சுமிதீர்த்தம்*
*இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸ்னானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.*

*2. சாவித்திரி தீர்த்தம்,*
*3. காயத்ரி தீர்த்தம்,*
*4. சரஸ்வதி தீர்த்தம்*
*இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.*

*5. சேது மாதவ தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.*

*6. நள தீர்த்தம்*
*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்கலோகப் பதவி அடைவர்.*

*7. நீல தீர்த்தம்*
*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.*

*8. கவாய தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.*

*9. கவாட்ச தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.*

*10. கந்நமாதன தீர்த்தம்*
*சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.*

*11. சங்கு தீர்த்தம்*
*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.*

*12. சக்கர தீர்த்தம்*
*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.*

*13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதுடன், பில்லி சூனியமும் நீங்கும்.*

*14. சூர்ய தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானம் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.*

*15. சந்திர தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி ஆகும்.*

*16. கங்கா தீர்த்தம்*
*17. யமுனா தீர்த்தம்*
*18. காயத்ரிதீர்த்தம்*
*இம்மூன்று தீர்த்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.*

*19. சாத்யாம்ருத தீர்த்தம்*
*திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.*

*20. சிவ தீர்த்தம்*
*இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.*

*21. சர்வ தீர்த்தம்*
*இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.*

*22. கோடி தீர்த்தம்*
*இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமரானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்த்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.கோடி தீர்த்தத்தில் நீராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.*

Saturday, 1 September 2018

*#ஆஞ்சநேயருக்கு_ஏன்_வடை_மாலை*

*#பரமாச்சாரியாள்_விளக்கம்*


************************************************************************************************************************************


*ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை போடுகிறார்கள் தெரியுமா..?*

*ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.*

*மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.*

*இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.*

*அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.*

*இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.*

*ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.*

*அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.*

*“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர். “வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.*

*“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.*

*ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:*

*“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.*

*ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”*

*பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.*

*தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.*

*கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.*

*ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.*

*“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.*

*அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.*

*உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.*

*சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி?*

*பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.*

*அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.*

*மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ?*

*அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.*

*வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.*

*வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.*

*அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.*

*ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.*

*சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.*

*அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.*

*இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.*

*அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.*

*அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.*

*இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.*

*தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.*

*இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.*

*இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.*

*வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.*

*சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.*

*தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.*

*அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.*

*அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு அணிவித்து வழிபடுகிறார்கள்.*

*எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.*

*அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டுச் சிரித்தார் மஹா பெரியவா.*

*பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.*

*சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.*

*கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.*



*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

 *#வாழ்க_வளமுடன்.*
*#ஆஞ்சநேயருக்கு_ஏன்_வடை_மாலை*

*#பரமாச்சாரியாள்_விளக்கம்*


************************************************************************************************************************************


*ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை போடுகிறார்கள் தெரியுமா..?*

*ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.*

*மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.*

*இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.*

*அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.*

*இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.*

*ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.*

*அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.*

*“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர். “வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.*

*“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.*

*ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:*

*“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.*

*ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”*

*பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.*

*தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.*

*கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.*

*ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.*

*“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.*

*அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.*

*உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.*

*சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி?*

*பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.*

*அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.*

*மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ?*

*அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.*

*வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.*

*வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.*

*அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.*

*ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.*

*சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.*

*அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.*

*இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.*

*அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.*

*அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.*

*இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.*

*தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.*

*இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.*

*இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.*

*வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.*

*சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.*

*தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.*

*அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.*

*அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு அணிவித்து வழிபடுகிறார்கள்.*

*எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.*

*அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டுச் சிரித்தார் மஹா பெரியவா.*

*பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.*

*சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.*

*கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.*



*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

 *#வாழ்க_வளமுடன்.*

Thursday, 30 August 2018

🌸ஸ்ரீ ராகவேந்திரர்
-
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார்.
-
வேங்கடநாதர் கல்வியில் சிறந்து விளங்கினார். சிறுவனாக இருந்தபோதே இவரது பெருமை வெளிப்பட்டது. மிகச் சிறிய சொல்லான 'ஓம்' என்பது எவ்விதம் ஒரு அளவிட இயலாக் கடவுளின் பெருமையை உள்ளடக்கியதாகும் எனத் தன் தந்தையிடம் கேட்டாராம். ஆனால் இவரது பெருமையை அறிந்துகொள்ள இயலாது, இவரது சிறுவயதிலேயே வேங்கடநாதரின் தந்தை இறந்து விட்டார். வேங்கடநாதரின் மூத்த சகோதரனே மற்ற குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். மதுரையில் வசித்த தனது சகோதரியின் கணவர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹாச்சார்யா என்பவரின் இல்லத்தில் இவரது கல்வி தொடர்ந்தது.
-
மதுரையிலிருந்து திரும்பியதுமே, ஸரஸ்வதி என்னும் நற்குலப் பெண்மணியுடன் இவரது திருமணம் நிகழ்ந்தது. புலன்களை அடக்கிய ஒருவரது கல்வி, திருமண வாழ்க்கையால் தடைப்படுவதில்லை என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸரஸ்வதி தேவியின் அருளால், வேங்கடநதரின் கல்வி திருமணத்திற்குப் பின்னும் மேலும் சிறந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய கும்பகோணத்துக்குச் சென்றார். வேதாந்தம், இலக்கணம், சாஸ்திரங்கள் முதலானவற்றை ஸுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றார். தான் கற்றவற்றிற்கான விளக்கங்களை இரவு முழுவதும் கண் விழித்து எழுதினார். கற்றறிந்த பலருடனும் தர்க்கம் செய்து அவர்களைத் தோற்கடித்தார். தஞ்சை அரசவையின் மிகச் சிறந்த விற்பன்னரான வெங்கடேச்வர தீக்ஷிதர் என்பவர் அவர்களில் ஒருவர். இவரது இலக்கண அறிவு, வாதிடும் திறன் முதலானவற்றைக் கண்டு வியந்த ஸுதீந்திர தீர்த்தர், வேங்கடநாதருக்கு 'மஹாபாஷ்ய வேங்கடநாதாச்சார்யா' எனும் பட்டத்தை வழங்கினார். 'தப்தமுத்ர தாரணா' என்பதன் சிறப்பைப் பல ஸ்ம்ருதிகளின் மூலம் உதாரணம் காட்டி, எவராலும் எதிர்க்க முடியாத அளவில் வாதம் புரிந்து தம்மை எதிர்த்தவர்களை வென்றார்.
-
கும்பகோணம் வழியே யாத்திரை செல்லும்போது, ஸ்ரீ வேங்கடநாதரையும், அவரது மனைவியையும் ஒருவர் தன் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அழைத்தார். இவரது பெருமையை அறியாத அந்த வீட்டுக்காரர்கள், ஏதாவது வேலை வாங்கியெ இவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென நினைத்து, வந்தவர்களுக்கு சந்தனம் அரைத்துத் தருமாறு பணித்தனர். தமது வழக்கப்படி, வேங்கடநாதர் மந்திரங்களைச் சொல்லியவாறே சந்தனம் அரைத்தார். அதை இட்டுக் கொண்டவர்களெல்லாம், உடலெங்கும் வெந்துபோவதுபோன்ற ஒரு எரிச்சலை உணர்ந்து அலறினர். இதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டபோது, அக்னி ஸுக்தம் சொல்லிக்கொண்டே இதை அரைத்ததாகவும், அவற்றின் சக்தியாலேயே இப்படி எரிச்சல் ஏற்பட்டது எனவும் பதிலுரைத்தார். தகுதி வாய்ந்த ஒருவர் பக்தியுடனும், சிரத்தையுடனும் இப்படிச் செய்யும்போது, வேத மந்திரங்கள் அவருக்குக் கட்டுப்படுகின்றன என்பதை உணர்ந்த அனைவரும் ஸ்ரீ வேங்கடநாதரைப் ப‌ணிந்து வணங்கி, அவரது பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கோரினர்.
-
இப்படியாக இறை வழிபாட்டிலும், சமூக சேவையிலும் ஸ்ரீ வேங்கடநாதர் ஈடுபட்டிருக்கையில், அவரது ஆன்மீக குருவான ஸுதீந்திர தீர்த்தர் தமக்கு ஒரு வாரிசைத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்ரீ வேங்கடநாதரே இதற்கு முற்றிலும் தகுதியானவர் என ஸுதீந்திரருக்குக் கனவில்  இறைவன் உணர்த்தினார். தனது இளம் மனைவி, சிறு வயது பாலகன் இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு இருப்பதால், முதலில் ஸ்ரீ வேங்கடநாதர் மறுத்தார். அப்போது கல்விக்கு அதிபதியான வித்யாலக்ஷ்மி அவரது கனவில் தோன்றி, இவ்வுலகம் உய்ய அவரைச் சந்யாசம் மேற்கொள்ளுமாறு கூறியருளினார். இதை ஒரு நல்ல சகுனமாகக் கருதிய வேங்கடநாதர் தனது மனதை மாற்றிக்கொண்டு 1621-ல் பங்குனி மாதம், சுக்ல த்விதீயை கூடிய நன்னாளில் துறவறம் பூண்டார்.
-
ஸ்ரீ வேங்கடநாதர் சந்யாசம் பூண்டதை ஏற்றுக்கொள்ள இயலாத அவரது மனைவி தற்கொலைசெய்து கொண்டாள்.  . இந்து சமய சாஸ்திரங்க‌ளின்படி, அகால மரணமடைந்தவர் பேயாக மாறி, பூமிக்கும், சுவர்க்கத்துக்கும் இடையே அல்லாடுவர் என்பதற்கொப்ப, பேயாக மாறிய ஸரஸ்வதி, அந்த உருவிலேயே மடத்தை நோக்கி ஓடினாள். ஆனால், அதற்குள் அவளது கணவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகத் துறவறம் கொண்டுவிட்டார். தனது மஹிமையால் பேயுருவில் தமது பூர்வாச்ரம மனைவி வந்திருப்பதை உணர்ந்து, அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் கமண்டலத்திலிருந்து சில துளி நீரைத் தெளிக்கவே, பிறப்பு, இறப்புகளைக் கடந்து மோக்ஷம் அடைந்தாள். தன்னலமற்ற அவளது சேவைக்குக் கிடைத்த பரிசாக‌ இது அமைந்தது.
-
கும்பகோணத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் இருந்தபோது, தஞ்சை மாநிலம் முழுவதும் 12 ஆண்டுகளாகக் கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர் ஸ்வாமிகளைப் பணிந்து , பஞ்சம் தீர ஏதேனும் யாகங்கள் வளர்க்க வேண்டினார். அவ்வாறே ஸ்வாமிகள் செய்த உடனேயே, மழை பொழிந்து, வளம் பொங்கியது. விலையுயர்ந்த ரத்தினங்கள் பொறித்த ஒரு அழகிய மாலையை தனது நன்றியறிதலாக மன்னர் மடத்துக்கு வழங்கினார். தாம் செய்துகொண்டிருந்த ஒரு யாகத்தில் அந்த மணிமாலையை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார். தமக்கு இழைக்கப்பட்ட அவமானமாக மன்னர் கருதிக் கோபமுற்றதைக் கண்ட ஸ்வாமிகள், தமது திருக்கரங்களை ஹோம குண்டத்துள் விட்டு, சற்றுக்கூட மாற்றுக் குறையாத வடிவில் அதே மாலையைத் திரும்பவும் எடுத்து, அதை மன்னருக்கு அளித்தார். ஸ்வாமிகளின் கரங்களிலோ, அந்த மாலையிலோ தீயின் சுவடு சற்றுக்கூட இல்லை. மஹானின் பெருமையை உணர்ந்த மன்னர் அன்று முதல் ஸ்வாமிகளின் தீவிர பக்தரானார்.
-
தென்னிந்தியா முழுவதும் துவைத தத்துவத்தைப் பரப்பவெனத் தீர்த்த யாத்திரை செல்ல முடிவுசெய்து கிளம்பிய ஸ்வாமிகள், இராமேச்வரம்,ஸ்ரீரங்கம் முதலான தலங்களுக்குச் சென்றார். இராமேச்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் லிங்கம்,ஸ்ரீராமன் இராவணனுடன் போரிட, இலங்கைக்குச் செல்லும்முன் வ‌ழிபட்ட லிங்கமே எனப் பிரகடப்படுத்தினார். இது தொடர்பாக, அந்தணர் ஒருவருக்கும், ராக்ஷஸி ஒருவருக்கும் பிறந்த அரக்கனே இரவணன் என்றும் விளக்கினார். ஒருசில அறிஞர்கள் சொல்லுவதுபோல, பரம்பொருளான ஸ்ரீராமர், இராவணனைக் கொன்றதால் ஏற்பட்டதாக‌த் தவறாகக் கூறப்படும் பிரம்மஹத்தி முதலான எவ்வித தோஷங்களுக்கும் ஆட்பட்டவர் அல்லர் என்றும் மறுத்துரைத்தார்.
-
அங்கிருந்து கன்யாகுமரி, திருவனந்தபுரம் முதலான திருத்தலங்களுக்குச் சென்ற பின்னர், தனது பூர்வாச்ரமத்தில், இளவயதைக் கழித்த மதுரைக்கு வந்து, அங்கு வசித்த தனது [பூர்வாச்ரம] தமக்கையின் கணவரையும் சந்தித்தார். பின்னர், விஷ்ணு மங்களா, குக்கே ஸுப்ரமண்யா, உடுப்பி முதலிய தலங்களுக்கும் சென்று, தமது துவைதக் கருத்துகளின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்போது அவர் எழுதிய பாஷ்யங்கள் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டு அவரைப் பின்தொடர, செல்லுமிடமெங்கும் பெருமளவில் பக்தர் கூட்டத்தைப் பெற்றார்.
-
 தமது புனித யாத்திரையின்போது ஒருநாள் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் [ஹூப்ளி அருகே] ஸ்வாமிகள் வெயிலின் கொடுமையினால் நிழல் தரும் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது ஒரு இஸ்லாமிய நவாப் இவரை நோக்கி வருத்தத்துடன் வருவதைக் கண்டு, என்ன விஷயமென விசாரிக்கையில், பாம்பின் விஷக்கடியால் மாண்டுபோன தனது மகனைப் புதைத்துவிட்டு வருவதாக நவாப் கூறினார். இதைக் கேட்டதும், சற்று நேரம் அமைதியாக தியானித்த ஸ்வாமிகள், அந்தக் குழந்தையை சமாதியிலிருந்து வெளியெடுக்குமாறு சொல்ல, குழம்பிய மனத்துடன் நவாப் அவ்வாறே செய்தார். தமது கமண்டலத்திலிருந்து சில துளி நீரை அந்த உடலின் மீது தெளித்துவிட்டு, தனது இஷ்ட தெய்வத்தை எண்ணி ஸ்வாமிகள் மனதுள் பிரார்த்தனை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் குழந்தை அப்போதுதான் கண் விழித்ததுபோல் எழுந்தான். நவாபின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை!
-
இது நிகழ்ந்து பல நாட்களுக்குப் பின், அதோனி ராஜ்ஜியத்தின் நவாபை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது. ஸ்வாமிகளிடம் மரியாதை காட்டுவதற்குப் பதிலாக, அவரது அபூர்வ சக்தியைச் சோதிக்க எண்ணிய நவாப், ஒரு தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து, அவற்றை ஒரு பட்டுத் துணியால் மூடி, ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தான். மஹான்களை சந்திக்கும்போது இதுபோல சன்மானம் செய்வது இந்து வழக்கம். தனது கமண்டலத்திலிருந்து புனித நீரை அந்தத் துணியின் மீது தெளித்துவிட்டு ஸ்வாமிகள் அதை நீக்கியபோது, அங்கே பழங்கள் நிறைந்திருந்தன. தனது தவற்றை உணர்ந்து வருந்திய நவாப், மஹானின் பெருமையை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கோரி, அவரைப் பணிந்து வணங்கி அவரது தீவிர பக்தனானான். பிராயச்சித்தமாக, ஸ்வாமிகள் வேண்டுமளவுக்கு நிலத்தையும், செலல்வத்தையும் அளிப்பதாக வேண்டினான். தமக்கென எதுவும் வேண்டா ஸ்வாமிகள், 'மாஞ்சாலே' என்னும் பகுதியில் இருக்கும் நிலத்தைத் தமது மடத்துக்குத் தருமாறு கூறினார். வறண்ட இந்த நிலத்தை விடவும், செழிப்பான வேறிடத்தில் நிலமளிப்பதாக நவாப் கூறியபோதும், துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த இந்த நிலமே போதும் என ஸ்வாமிகள் தீர்மானமாகக் கூறிவிட்டார். அங்கே தற்போது "மந்திராலயம்" என அழைக்கப்படும் ஸ்வாமிகளின் மடம் ஸ்தாபிக்கப்பட்டது.
-
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள், ஒரு பக்தரிடம், இந்த இடத்தில்தான் துவாபர யுகத்தில் பிரஹலாதன் என்னும் அரசன் ஸ்ரீராமரை வேண்டி யாகங்கள் செய்தான் என்பதால் இது ஒரு புனிதத்தலம் என ஸ்வாமிகள் அருளினார். இந்த மந்திராலயம் என்னும் புனித க்ஷேத்திரத்தில் ஸ்வாமிகள் பல காலம் தங்கி, தமது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தார். வருபவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்னும் ஸ்வாமிகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கு இன்றும் இந்தப் புனிதமான அன்னதானம் பல பக்தர்களின் நன்கொடையால் தொடர்ந்து நிகழ்ந்து....